பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட சீரியல் கவர்ச்சி புயல்.. வாய் கொழுப்பால் நடந்த விபரீதம்

சமீப காலமாக சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவிற்கு அப்டேட் ஆகி வருகின்றனர். இருப்பினும் அவர்களால் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் திடீரென்று வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுக்கும் சின்னத்திரை பிரபலங்கள், தேவை இல்லாமல் எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்கின்றனர்.

அப்படிதான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை ஒருவர், மேடையில் பிரபல நடிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூட நடித்த நடிகை என்ற அட்வான்டேஜில் எதார்த்தமாக கிண்டல் செய்ததை பெரிய விஷயமாக மாற்றி, பெரும் சர்ச்சையை கிளப்பி பிரபலமாக நினைத்தார்.

Also Read: கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சினிமா கேரியர்.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டதால் நடிகர் படும்பாடு

அதிலும் வாய்க்கொழுப்பால் இஷ்டத்திற்கு பேட்டிகளை அளித்து அந்த நடிகரின் மீது அபாண்டமாக பழி சுமத்தினார். ஆனால் அந்த நடிகை சண்டை போட்ட நடிகரின் நண்பர் பெரிய இடம் என்பதால், கோலிவுட்டின் முக்கிய தயாரிப்பாளர்களும் முன்னணி இயக்குனர்களும் அந்த நடிகையை ரிஜெக்ட் செய்த வருகின்றனர்.

காசு வாங்காம சும்மா நடிச்சு கொடுத்தா கூட வேண்டவே வேண்டாம் என சுத்தமாக ஒதுக்கி விட்டார்களாம். ‘தவளை தன் வாயாலே கெடும்’ என்பது போல், வாய்க்கொழுப்பினால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்து விட்டேனே என்று அந்த நடிகை ரொம்பவே கவலையில் ஆழ்ந்திருக்கிறார்.

Also Read: புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்

இருப்பினும் கவர்ச்சியை தாறுமாறாக காட்ட வேண்டும் என, கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்து சோசியல் மீடியாவை ரணகளம் செய்கிறார். இவருடைய அதிரடியான எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் இளசுகளை திணறடிக்கிறது. இதனால் பட வாய்ப்புகள் குவியும் என்றும் நம்புகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்