சார்பட்டா படம் தியேட்டரில் வந்திருந்தால் வெட்டு குத்துதான்.. ஆத்திரமடைந்த பிரபலம்

அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக மாறியுள்ளது சார்பட்டா பரம்பரை. ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் ஆர்யாவின் சினிமா மார்க்கெட்டுக்கு இந்தப் படம் பெரிய அளவில் உதவியுள்ளது என்று சொன்னால் மறுக்க இயலாது. இந்த படத்தை முன்னணி நடிகர்கள் முதல் மூத்த இயக்குநர்கள் வரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவ்வளவு ஏன் சார்பட்டா படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே இந்த படத்தை போற்றிப் புகழ்ந்துள்ளனர். இப்படி இருக்கையில் ஒரே ஒரு பிரபலம் மட்டும் சார்பட்டா படத்தின் மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

சமீபகாலமாக சர்ச்சை நாயகனாக வலம் வருபவர் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் சார்பட்டா படத்தை பற்றி விமர்சனம் செய்திருந்தார்.

அதில் எழுபதுகளில் நடந்த பாக்ஸிங் சண்டைக் காட்சிகளை நேரில் பார்த்தவன் நான் எனவும், ஆனால் படத்தில் அதற்கு நேர் எதிராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படம் மட்டும் தியேட்டரில் வெளியாகி இருந்தால் இரு தரப்புக்கும் மிகப்பெரிய சண்டை உருவாகி இருக்கும்.

வெட்டுக்குத்து நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விமர்சித்துள்ளார். முதல் சில மணி நேரம் படம் நன்றாக இருப்பது போல் தோன்றிய எனக்கு அதன் பிறகு பாக்ஸிங் காட்சிகளை பார்த்த உடன் கண்டிப்பாக இந்த படம் தவறாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார் பயில்வான்.

தற்போது இவருடைய கருத்துதான் பேசு பொருளாக மாறியுள்ளது. மேலும் இந்த படம் இரு பரம்பரைக்கும் இடையில் சண்டை மூட்டி விடும் விதமாக அமைந்துள்ளதாகவும் விமர்சித்து தள்ளியுள்ளார். இதற்கு படக்குழுவினரின் பதில் என்னவாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

bailwan-ranganathan-cinemapettai
bailwan-ranganathan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்