Poonam Pandey: செத்து செத்து விளையாடுவோமா என்ற வடிவேலு காமெடி ஒன்று இருக்கும். அப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அவருடைய சோஷியல் மீடியா பக்கத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்தனர். ஆனால் மறுநாளே நான் உயிரோடுதான் இருக்கிறேன் பிம்பிலிக்கா பிளாப்பி என ஒரு வீடியோவை போட்டு மன்னிப்பு கேட்டிருந்தார் பூனம் பாண்டே.
மேலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக தான் இப்படி ஒரு செய்தியை அறிவித்தேன். இதனால் யாரும் மனசு வேதனை பட்டால் என்னை மன்னித்து விடுங்கள் என ஒரு டிராமாவை போட்டார். இதைப் பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் ஒரு உயிரோட மதிப்பு என்ன தெரியுமா? எந்த விஷயத்துல பிராங்க் பண்ணனும்னு ஒரு லிமிட் இருக்கு என அவரை தாளித்து விட்டனர்.
Also read: 32 வயதில் உயிரை விட்ட பூனம் பாண்டே.. காரணம் கேட்டு அதிர்ந்த திரையுலகம்
அதுமட்டுமின்றி இப்படி ஒரு விஷயத்தை செய்வதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பதறிப்போன பூனம் அப்படியெல்லாம் இல்லை. நான் ஒரு ரூபா கூட வாங்காமல் இந்த விழிப்புணர்வை செய்தேன். எல்லாம் ஒரு நல்ல நோக்கத்திற்காக தான் என உருட்டினார்.
ஆனால் அவருடைய பேச்சை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் தற்போது பூனம் மற்றும் அவருடைய கணவர் மீது பைசன் அன்சாரி என்ற நபர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இப்படி ஒரு டிராமா போட்ட பூனம் சிறைக்கு செல்ல வேண்டும். இதனால் ஏற்பட்ட குழப்பத்திற்கு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது பூனம் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. ஆக மொத்தம் நல்லது செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு சுயலாபத்திற்காக பொய்யான செய்தியை பரப்பிய பூனம் பாண்டேவுக்கு இது தேவைதான்.
Also read: அட பைத்தியமா நீ.? செத்து செத்து விளையாண்ட பூனம் பாண்டே.. அவரே வெளியிட்ட வீடியோவால் வெடித்த சர்ச்சை