சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சு.. டாப் நடிகையால் நொந்து நூடுல்ஸ் ஆன கணவர்

நடிகை சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து படு ஜோராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நட்பு வட்டாரம் எல்லாமே மிகப்பெரிய இடம் தான். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பரிச்சியம் இல்லாத ஒருவரை நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது கணவருக்காக பெரிய இடத்தில் எல்லாம் வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்துள்ளார். அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மனைவியின் அந்தஸ்தை வைத்து அவருக்கு மாஸ் ஹீரோவின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தலைகால் புரியாமல் உச்சகட்ட மகிழ்ச்சியில் நடிகையின் கணவர் இருந்தார்.

இந்த படம் மட்டும் நிச்சயம் ஹிட் அடித்தால் அவரது கேரியரே மொத்தமாக மாறிவிடும் என்ற நிலையில் ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்தப் பெரிய ஹீரோ இவர் வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம். படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு இவரை தூக்கி விட்டதால் இப்போது மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்.

ஏனென்றால் அவருக்கு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் அவருக்கு ஓரளவு நல்ல பெயர் சினிமாவில் இருந்தது. இப்போது டாப் ஹீரோவே இவரை ஒதுக்கி உள்ளதால் அடுத்த பட வாய்ப்பு இவருக்கு வருமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. மேலும் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல கணவரை உசுப்பேற்றி வாய்ப்பு வாங்கி தருவதாக அவரது கேரியரையே க்ளோஸ் செய்துள்ளார் நடிகை.

இதனால் இப்போது நடிகை வீட்டில் தினமும் சண்டை, சச்சரவு தான் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த நடிகை இந்த வாய்ப்பு போனால் என்ன வேறு ஒரு நல்ல வாய்ப்பை தருகிறேன் என கணவரிடம் கூறி வருகிறாராம். இனிமேல் உன் சிபாரிசே வேண்டாம் என கணவர் உறுதியாக கூறிவிட்டாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →