பொங்கியெழுந்த பாக்கியா.. கோபிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது ராதிகாவுடன் கோபி பழகி வருவது பாக்யாவுக்கு தெரிந்துள்ளது. இதனால் நிலைகுலைந்து போன பாக்கியா மழையில் நனைந்தபடி அப்படியே வீட்டுக்கு வந்துள்ளார்.

பித்து பிடித்தது போல் இருக்கும் பாக்கியா மொட்டைமாடியில் ஒரு நாள் முழுவதும் நின்றபடியே இருந்துள்ளார். இந்நிலையில் கோபி, மருத்துவமனைக்கு வந்த பாக்கியா ஏன் தன்னை பார்க்கவில்லை என்ற குழப்பத்தில் உள்ளார். ஒருவேளை ராதிகாவை பார்த்திருப்பாளோ என்ற சந்தேகமும் அவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் மறுநாள் ஜெனி மற்றும் செல்வி இருவரும் மொட்டை மாடிக்கு வந்த பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஒருவழியாக எல்லாரும் வற்புறுத்தலால் பாக்கியா மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறார். அப்போது கோபியும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருகிறார்.

கோபியை பார்த்த பாக்கியா பல கேள்விகளை எழுப்புகிறார். இந்நிலையில் எல்லோர் முன்னாடியும் பாக்கியா ஹாஸ்பிடலில் பணம் யார் கட்டியது என கேட்கிறார். உடனே செழியன் ஸ்கேன் எடுக்க பணம் நீதானம்மா கட்டின என கேட்கிறார். பாக்கியலட்சுமி கட்டுனன் சொன்னாங்களா என்று பாக்கியா கேட்கிறார்.

கோபியின் மனைவி தான் பணம் கட்டினாங்கன்னு சொன்னாங்க என செழியன் கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியில் உள்ளனர். உடனே கோபியின் அம்மா இப்ப எதுக்கு இதெல்லாம் கேட்குற, நீ போய் உட்காருபா என கோபியிடம் சொல்கிறார்.

உடனே கோபி நகர பாக்கியா வழியை மறுக்கிறார். இதனால் பாக்கியா கண்டிப்பாக இரண்டில் ஒரு முடிவு தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இத்தனை நாள் புருஷன் என்பதற்காக எல்லாத்தையும் சகித்துக் கொண்டிருந்த பாக்கியா தற்போது பொங்கி எழுந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்