படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றிய நடிகை.. தேடிச்சென்று பளார் பளார் என அறைந்த மூத்த நடிகர்

சினிமாவைப் பொருத்தவரை இயக்குனர்கள் தான் பெரும்பாலும் தன்னிடம் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை அடித்து நடிப்பு சொல்லிக் கொடுப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவும் தமிழ் சினிமாவில் இப்போது பாலா தான் அப்படிப்பட்ட இயக்குனரிடம் பேசி வருகின்றனர்.

ஆனால் தெலுங்கு சினிமாவை பொருத்தவரை நடிகர்களுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை இவ்வளவு ஏன் தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் யாரேனும் அத்துமீறினால் கூட அங்கேயே அவர்களை அடிக்கும் பழக்கத்தை சிலர் வைத்துள்ளனர்.

அதில் எப்போதுமே முதலிடம் நம்ம நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு தான். 60 வயதை கடந்த பாலகிருஷ்ணா இப்போதும் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி கோபப்பட்டு தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை அடிக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அவருக்கும் அண்ணன் ஒருவர் இருக்கிறாராம். அவர்தான் தெலுங்கு நடிகர் மோகன்பாபு. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் மேஜர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மோகன் பாபு எப்போதுமே தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட வேண்டும் என நினைப்பவராம். அதுவும் அவரே தயாரித்து நடித்தால் அவ்வளவுதான். அவருக்கு ஆறு மணிக்கு கால்ஷீட் என்றால் அனைவரும் 5 மணிக்கே வந்துவிட வேண்டும்.

அவர் இதுவரை நேரம் தவறி வாழ்ந்ததாக சரித்திரமே இல்லையாம். அப்படி மோகன் பாபு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு ஜோடியாக அந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகை ஒருவர் நடித்து வந்துள்ளார். ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி நீண்ட நேரம் வராமல் இழுத்தடித்தாராம்.

பொறுமையாக இருந்த மோகன் பாபு ஒரு கட்டத்தில் அந்த நடிகையின் ஏமாற்று வேலையை தெரிந்து கொண்டு நேராக அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே சென்று வாசலிலேயே வைத்து பளார், பளார் என்று அறைந்து விட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

mohan-babu-cinemapettai
mohan-babu-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்