கோலிவுட்டில் 5 முன்னணி பிரபலங்களுடன் மல்லுக்கட்டிய இளையராஜா.. இதுவரை வெளிவராத உண்மைகள்!

இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுபவர் இளையராஜா. இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் இசையால் வசியப்படுத்தி வைத்துள்ளார். இத்தகைய பெருமைக்குரிய இளையராஜா ஐந்து முன்னணி சினிமா பிரபலங்களுடன் காரசாரமாக சண்டையிட்டுள்ளாராம்.

கங்கை அமரன்: இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன், தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும் இயக்குனராகவும், திறமைசாலியாக இருந்தாலும், இளையராஜாவின் முழு வரவு செலவையும் பார்த்து வந்துள்ளார். சொல்லப்போனால் இளையராஜா கோபுர உச்சமடைய இவரும் ஒரு காரணம் என்பதால் சண்டை ஏற்பட்டுள்ளது.

வைரமுத்து: முதல் மரியாதை படத்திற்கான பாடல் பதிவின் போது கரெக்சன் சொன்ன வைரமுத்துவிடம் பாட்டே தப்பு என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டு உள்ளார் இளையராஜா.

மணிரத்தினம்: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த மணிரத்தினம் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்துள்ளார் இளையராஜா. அதனால் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தின் பாடல்களை இசையமைக்கும் போது, பாடல் கதைக்கு செட் ஆகவில்லை என சொன்னதற்கு மணிரத்னத்துடன் சண்டையிட்டு உள்ளார் இளையராஜா.

ஏஆர் ரகுமான்: அஞ்சலி படத்தில் மணிரத்தினத்திற்கு இளையராஜாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய படங்களில் ஏஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியதால், ஏஆர் ரகுமானின் மீது இளையராஜா சண்டையிட்டுள்ளார். ஏ ஆர் ரகுமான் இளையராஜாவின் சிஷ்யன் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப்பின் இளையராஜாவின் ஆருயிர் நண்பனாக திகழ்ந்தவர் பாரதிராஜா.

ilayaraja-arrahman
ilayaraja-arrahman

எஸ்பி பாலசுப்ரமணியம்: முன்னணி பின்னணி பாடகரான எஸ்பிபி – இளையராஜாவிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதன் பின்புதான் இளையராஜா எஸ்பிபி-யை புறக்கணித்துவிட்டு மலேசியா வாசுதேவனை அறிமுகப்படுத்தினார். அதன்பின் எஸ்பிபி-யை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான வாய்ப்புகளை மலேசியா வாசுதேவனுக்கே இளையராஜா கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Ilaiyaraaja-SPB-cinemapettai

எனவே இவர்கள் அனைவரும் இளையராஜாவிற்கு நெருங்கியவர்கள் என்றாலும் கருத்து வேறுபாட்டினால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் இளையராஜா ஈடுபட்டுள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்