அட்ஜஸ்ட்மென்ட் செய்தாச்சு இன்னும் என்ன இருக்கு.. அந்தரங்க வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்கிய 5 நடிகைகள்

நடிகைகளை பொறுத்தவரை சினிமாவிற்கு வந்துவிட்டாலே அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பது கொஞ்சம் தடம் புரளவே செய்யும். அதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தனக்கான வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்கிறார்கள். பல நடிகைகள் சொந்த வாழ்க்கையில் தடுமாறியே போகிறார்கள். அதிலும் கவர்ச்சி நடிகைகளாக நடிப்பவர்களின் சொந்த வாழ்க்கை என்பது கொஞ்சம் கேள்விக்குறியாகவே அமைந்து விடுகிறது.

கிரண்: நடிகை கிரண் ரத்தோட் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்தவர். முதலில் ஹீரோயின் ஆக நடிக்க வந்தவர் தான் கிரண். கமல், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர். மார்க்கெட் குறைய குறைய அப்படியே கவர்ச்சி நடிகை ஆக மாறிவிட்டார். நீண்ட காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்து இருந்த இவர் தற்போது ஏகத்துக்கும் கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் களம் இறக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: கிரண் ராத்தோட்டின் மட்டமான செயல்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல

மந்த்ரா: 90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா. விஜய் ,அஜித், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் இவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்திய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த காலத்திலேயே தென்னிந்திய சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டியவர் இவர். இவர் மார்க்கெட் குறைந்ததும் தெலுங்கு இயக்குனர் ஒருவரை மணந்து கொண்டார். கடைசியாக நடிகர் சிம்புவின் வாலு படத்தில் நடித்திருந்தார்.

புவனேஸ்வரி: நடிகை புவனேஸ்வரி இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார். இவர் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு ரிலீசான பாய்ஸ் படத்தில் விலைமாதுவாக நடித்திருப்பார். இந்தப் படம் மூலம் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமானார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி தனது சொந்த வீட்டில் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த செய்தி அப்போது கோலிவுட்டில் ரொம்பவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Also Read: மந்த்ராவின் வாழ்க்கையை கெடுத்த இயக்குனர்.. 2003ல் சடுகுடு விளையாடிய சோகம்

ரஞ்சிதா: இயக்குனர் பாரதிராஜாவின் நாடோடி தென்றல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. இவர் அர்ஜுன், சத்யராஜ், பிரபு, நெப்போலியன், விஜயகாந்த், மம்முட்டி என தமிழ் ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். சில காலமாக சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் நித்யானந்தாவுடன் அந்தரங்க வீடியோவில் சிக்கி மீண்டும் பிரபலமானார். விவாகரத்தான இந்த நடிகை இன்றளவும் நித்தியானந்தாவுடன் தான் இருக்கிறார்.

ஸ்ரீ ரெட்டி : சினிமாவில் துணை நடிகை ஆக நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் நடித்த படங்களை விட இவர் செய்த பரபரப்பான விஷயத்தை இந்திய அளவில் பிரபலமானார். அதாவது தென்னிந்திய சினிமாவின் பிரபலங்கள் பலர் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன் வாழ்க்கையில் விளையாடி விட்டதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டார். இதில் இயக்குனர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோரும் அடங்குவர்.

Also Read: சர்ச்சையால் சம்பாதித்த ஸ்ரீ ரெட்டி.. ஹீரோ, இயக்குனர்கள் அரங்கேற்றிய அந்தரங்க விளையாட்டு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்