உதயநிதி உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. எல்லை மீறிய உறவால் மன அழுத்தத்தில் நடிகை

Actress dating Relationship: உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஜெயித்து இன்று அரசியலிலும் நல்ல ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அதன் பின் அதில் அனுபவம் வந்த பிறகு நன்றாக நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பாதி படங்களுக்கு மேல் ஓரளவு டீசன்டான விமர்சனம் கிடைத்தது. அதன் பின் மாமன்னன் படத்தோடு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

நயன்தாரா: மூன்று படங்களில் இவர் நயன்தாராவுடன் நடித்திருக்கிறார். நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல் மற்றும் ஆதவன். ஆதவன் படத்தில் கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடித்திருப்பார் உதயநிதி. இந்த படங்களால் இருவருக்கும் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி உருவாகி நயன்தாரா மீது காதலில் விழுந்தார் உதயநிதி.

ஆண்ட்ரியா: இவர் வெளிப்படையாகவே பெரும்புள்ளி ஒருவர் என் வாழ்க்கையை சீரழித்து விட்டார். அவரால் தான் சினிமாவில் என் கேரியரை அழிந்தது என்று பேட்டி கொடுத்தார். இன்று வரை அந்த பெரும்புள்ளி யார் என்று தெரியவில்லை. ஆனால் மொத்த கோடம்பாக்கமும் உதயநிதி தான் என்று கூறுகிறது. இதனால் ஆண்ட்ரியா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார்.

ஹன்சிகா மோத்வானி: முதன் முதலாக உதயநிதி நடித்த படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படம் மூலம் ஹன்சிகாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்று அவருடனும் கிசுகிசுக்கப்பட்டார் உதயநிதி.

நிவேதா பெத்துராஜ்: சமீபத்தில் சவுக்கு சங்கர் கொடுத்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜிக்கு துபாயில் 50 கோடியில் வீடு ஒன்று வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று கூறினார். அதன்பின் நிவேதா தரப்பில் இருந்து இது முற்றிலும் பொய் என அறிக்கை வந்தது.

ரெஜினா கசான்ரா: சரவணன் இருக்க பயமேன் என்ற படம் மூலம் இருவரும் ஜோடி போட்டனர். படத்திலேயே இவர்களுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரியும் உண்டானது. அதன் பின் இருவரையும் பல இடங்களில் ஒன்றாக பார்க்க முடிந்தது. பட கெமிஸ்ட்ரியை உண்மையை ஆக்கினார் உதயநிதி.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →