43 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் மாஸ்டர் பட நடிகை? கணவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகலையே!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கணவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி வருவதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றவர் தான் சுரேகா வாணி. இவருக்கு தற்போது 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வெளியானபோது சுரேகா வாணியின் கதாபாத்திரம் நீக்கப்பட்டது குறித்து அவர் வருத்தப்பட்டாராம். ஆனால் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் அதுவே அவருக்கு பாசிடிவ் விமர்சனமாக மாறி பட வாய்ப்புகள் அதிகமாக தேடி வருகிறதாம்.

சுரேகா வாணி சுரேஷ் தேஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சுரேஷ் இறந்துவிட்டார். ஆனால் என்ன மாதிரியான உடல் நலக் குறைவு என்பதை சுரேகா வாணி பத்திரிகைகளில் தெரிவிக்காமல் மறைத்து விட்டாராம்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தமிழ் மற்றும் தெலுங்கு வட்டாரங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

surekhavani-cinemapettai
surekhavani-cinemapettai

ஆனால் இதுகுறித்து சுரேகா வாணி தெரிவிக்கையில், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமில்லை எனவும், எனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை கட்டாயம், திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம் என கூறியுள்ளார் சுரேகா வாணி.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்