ரஜினியை வெறுக்க வைத்த 4 விஷயங்கள்.. இப்ப வரை தலைவர் மேல் உள்ள கரும்புள்ளி

Rajini: ரஜினியை பொருத்தவரை என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தாலும் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்ற சூட்சமம் அவருக்கு தெரியாது. அதே நேரத்தில் கெட்டிக்காரத்தனமான பேச்சையும் கொடுக்க தயங்குவார். இன்னும் சொல்லப்போனால் பாயிண்ட் பாயிண்டாக பேசி மற்றவர்கள் வாயை அடைக்கத் தெரியாது. ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் தேவை இல்லாமல் வார்த்தைகளை விட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்கி இருக்கிறார்.

அப்படி ரஜினி பேசிய 4 விஷயங்கள் பூகம்பகமாக வெடித்திருக்கிறது. அத்துடன் அந்த விஷயங்களால் மக்களும் இவரை வெறுக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது. அது இப்பொழுது வரை இவர் மீது மிகப்பெரிய கரும்புள்ளியாக இருக்கிறது. அது என்ன விஷயங்கள் என்று தற்போது பார்க்கலாம். அதில் முதலாவதாக இவருடைய அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான்.

அதாவது ஆரம்பத்தில் எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனக்கு அதில் எந்தவித ஆசையும் இல்லை. நடிப்பு மட்டும் தான் என்னுடைய முழுமூச்சாக இருக்கும் என்று கூறி வந்தார். ஆனால் போகப் போக ரசிகர்கள் இவர் அரசியலுக்கு வந்தாக வேண்டும் என்று சொல்லியதால் இவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அதனால் அரசியலுக்கு வந்து விடுவேன் என்று கூறி ரசிகர்களை நம்ப வைத்தார்.

அப்படி இவர் மீது நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசியில் அவருடைய உடல் நிலையை காரணம் காட்டி நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறி அவர்களை ஏமாற்றி விட்டார். அடுத்ததாக பணப்புழக்கம். அதாவது 2000 ரூபாய் நோட்டு மற்றும் 500 ரூபாய் நோட்டு செல்லாது என்று மாற்றப்பட்டது. அதற்கு அந்த நேரத்தில் புது இந்தியா பிறந்துவிட்டது என்று ரஜினி கூறினார். இது சாமானிய மக்களுக்கு எதிராக பூகம்பத்தை கிளப்பியது.

அடுத்ததாக காவேரி பிரச்சனை. இதுவரை ரஜினி இது சம்பந்தமாக எந்தவித குரலும் கொடுக்காமல் மௌனம் காத்து வருவது இவருடைய ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுவான மக்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதாவது சினிமாவில் இருக்கும் பல நடிகர்கள் இதற்கு சம்பந்தமாக பேசி வரும் பட்சத்தில் இதுவரை இந்த விஷயத்திற்காக வாயே திறக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இதற்கு அடுத்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வேண்டாம் என்று போராடிய மக்களிடம் போராட்டத்தை நிறுத்த சொல்லி அறிவுரை கூறியிருந்தார். ஆனால் அப்பொழுது நடந்த துப்பாக்கி சூடு-க்கு எதிராக எந்தவித குரலும் கொடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். இப்படி இந்த நாலு விஷயங்களில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்