சூப்பர் ஸ்டார்களையே வாய்ப்பு கேட்க வைத்த 3 இயக்குனர்கள்.. அதுக்கு காரணம் இந்த படங்களோட ஹிட் தான்

சினிமாவில் எடுத்த எடுப்பிலேயே எந்த ஒரு இயக்குனருக்கும் பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்து விடாது. ஒரு நான்கு அல்லது ஐந்து படங்களை அவர் இயக்கி இருக்க வேண்டும். அதுவும் வெற்றி படங்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே டாப் ஹீரோக்கள் கால்ஷீட் கொடுப்பது பற்றி யோசிப்பார்கள்.

ஆனால் தமிழில் ஒரு மூன்று இயக்குனர்கள் வெறும் இரண்டே படங்கள் மட்டும் இயக்கிய நிலையில் மூன்றாவது படத்திலேயே உச்ச நடிகர்களை இயக்கி விட்டார்கள். அதுவும் இவர்கள் மூவரின் வளர்ச்சிக்கு ஒரே ஒரு ஹீரோ தான் லக்கி சார்மாக இருந்திருக்கிறார். அவர்கள் யார் என பார்க்கலாம்.

பா.ரஞ்சித் – தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற ஒரு காமெடி காதல் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரஞ்சித். இதனை தொடர்ந்து இவர் இரண்டாவதாக நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து மூன்று மற்றும் நான்காவது படங்களாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து காலா மற்றும் கபாலி ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஹெச். வினோத் – சதுரங்க வேட்டை என்ற ஒரு மாறுபட்ட கதை மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வினோத் முதல் படத்திலேயே தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலை நிறுத்தினார். தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து இரண்டாவதாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி வெற்றியும் கண்டார். இதன் மூலம் அடுத்தடுத்து மூன்று மற்றும் நான்காவது படமாக நடிகர் அஜித்தை வைத்து நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லோகேஷ் கனகராஜ் – மாநகரம் என்ற படம் மூலம் தமிழில் இயக்குனராக நுழைந்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக நடிகர் கார்த்தியை ஒரு நாள் இரவில் ஒரு கைதியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். படம் மாபெரும் வெற்றி. இதன் காரணமாக முன்றாவதாக தளபதியை விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரஞ்சித், வினோத், லோகேஷ் ஆகிய மூன்று இயக்குனர்களுமே தங்களின் 3வது படத்திலேயே ரஜினி, அஜித், விஜய் போன்ற உச்ச நடிகர்களை இயக்க அவர்களின் திறமை தான் காரணம். அதேபோல் இவர்கள் மூவரின் இரண்டாவது படத்திலும் நடிகர் கார்த்தி தான் நாயகனாக நடித்துள்ளார். எனவே அவரின் அதிர்ஷ்டமாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்