நல்ல கதைக்காக இந்த ஆண்டு ஓடிய 10 படங்கள்.. வசூல் சாதனை படைத்த அண்ணாத்த, மாஸ்டர்லாம் ஓரமா போங்க

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளிவந்தாலும், அவற்றில் சில படங்கள் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த தரமதிப்பீடு பெற்ற நல்ல கதை அம்சங்கள் கொண்ட 10 தமிழ்த் திரைப்படங்களை பார்க்கலாம்.

மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இப்படத்தில் நேர சுழற்சியில் சிக்கிய ஒரு முஸ்லீம், மாநிலத்தின் முதலமைச்சரைக் காப்பாற்றவும் மத வன்முறையைத் தடுக்கவும், ஒரு அரசியல் பேரணி நடைபெறுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட கதைக்களம் மக்கள் மனதைக் கவர்ந்தது.

மண்டேலா: யோகி பாபு நடிப்பில் காமெடி திரைப்படமாக வெளியானது மண்டேலா. ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முடித்திருத்தம் செய்யும் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் சாதிய அரசியல் ஆட்சி செய்யும் கிராமத்தில் கேம் சேஞ்சராக மாறுகிறார். அவரால் மக்கள் வாழ்வில் சில மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்பதே மண்டேலா.

கர்ணன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். கர்ணன் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒடுக்குமுறையாளர்களுக்கு இடையேயான போராட்டத்தின் பழக்கமான கதையாகத் தோன்றலாம். ஆனால் இயக்குனர் இப்படத்தை தனித்துவமாகவும் உலகளாவியதாகவும் உணரவைத்துள்ளார்.

டாக்டர்: நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். இப்படத்தில் மிக சீரியஸான கதைக்களத்தை கொண்ட காட்சிகளிலும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை கொண்டு காமெடியைத் தூவி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.

கயமை கடக்க: ஆர் கிரண் இயக்கி எம் நடராஜன், மாசாந்த் நடராஜன், நாகராஜன் கண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். ஒரு கருத்தியலைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு பேஸ்புக் நண்பர்கள் சந்திக்கிறார்கள், ஆனால் இருவரும் நிஜ வாழ்க்கையில் எந்த அளவிற்கு வேறுபடுகிறார்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். கயமை கடக்க சின்ன பட்ஜட்டில் சர்வதேச தரத்தை எட்டிப்பிடித்துள்ளது.

ஜெய் பீம்: ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். ஒரு பழங்குடிப் பெண்ணும், ஒரு நீதியுள்ள வழக்கறிஞரும், நீதிமன்றத்தில் பொய் வழக்கு போட்டு காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவர் காணாமல் போன மர்மத்தை அவிழ்க்க நீதிமன்றத்தில் போராடுகிறார்கள்.

ஓ மணபெண்ணே: கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓ மணபெண்ணே. தவறான அடையாளத்தால், கவலையற்ற இளைஞன் திருமணம் செய்து கொள்வதற்காக சுகதந்திரமாக முடிவு எடுக்கும் இளம் பெண்ணை சந்திக்கிறார். இவர்கள் இருவரும் வணிகத்தில் பங்குதாரர்களாக மாறுகிறார்கள், ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் பங்குதாரர்களாக இருக்க முடியும் என்பதே ஓ மணபெண்ணே.

கடைசில பிரியாணி: கடைசில பிரியாணி என்பது ஒரு சில இளைஞர்களின் உன்னதமான முயற்சியாக வெளிவந்த ஒரு திரைப்படம். மூன்று சகோதரர்கள் அவர்களின் தந்தையைக் கொன்ற மனிதனைக் கொல்லும் பணியைத் தொடங்குகிறார்கள். ஆனால் அங்கே
கொலைகாரனின் சைக்கோ மகனிடம் சிக்கிக் கொள்கிறார்கள். போலீசை பகடைக் காயாக உருட்டும் அந்த சைக்கோவிடம் சிக்கிய சகோதரர்களின் நிலை என்ன என்பதே கடைசில பிரியாணி

தலைவி: ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தலைவி. ஒரு நட்சத்திர நடிகை அரசியல்வாதியால் தாக்கப்படுகிறார். அந்த நடிகை ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தைத் தொடங்குகிறார், அது அவரை திரைகளில் இருந்து அதிகாரத்தின் தாழ்வாரங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

சார்பட்டா பரம்பரை: பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் நிறைய பாக்ஸிங் பரம்பரைகள் உள்ளன. இதில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் பல காலமாகப் போட்டி இருக்கிறது. கடைசியில் ஒரு போட்டி, அதில் தோற்றுவிட்டால் சர்பட்டா பரம்பரை இனி சண்டையே போடக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே சர்ப்பட்ட பரம்பரை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்