மாயா, பூர்ணிமாவ விட பெரிய சூழ்ச்சிக்காரி அந்த பொண்ணு தான் .. கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து போகும் சாயம்

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மாயா மற்றும் பூர்ணிமாவை ஆடியன்ஸ்கள் திட்டாத நாளே இல்லை. இரண்டாவது சீசனில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருந்ததை விட 10 மடங்கு தந்திரக்காரர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் வெளிப்படையாக தங்களுடைய தந்திரத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் உண்மையில் போட்டியாளர்களில் சிலர் நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு தங்களுக்கு என ஒரு கூட்டத்தை சேர்த்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 50 நாட்களை நெருங்கும் நிலையில் ஒரு சிலரின் உண்மை முகம் வெளிவர தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் போட்டியாளர் என்றால் அது ரவீனா தான். ஆரம்பத்தில், அவர் மணியுடன் பேசிக் கொண்டிருப்பது போட்டியாளர்களால் பெரிய அளவில் பேசப்பட்டாலும், ஐஷு மற்றும் நிக்சனின் காதல் ட்ராக் ஆரம்பித்த பிறகு இவர்களை கண்டுகொள்ள ஆளில்லாமல் போய்விட்டது.

Also Read:ஆண்டவரையே கதற விட்ட பசுக்கள் கூட்டம்.. ஜிங்ஜாங் போடும் காளைகள், சுவாரசியமாகும் சீசன் 7

மணி கோர்ட் டாஸ்கில் ஐஷு மற்றும் நிக்சன் மீது கேஸ் போட்டது கூட ரவீனா உடன் அவருக்கு இருக்கும் நட்பை நியாயப்படுத்தி கொள்வதற்காக தான். உண்மையில் மணி இல்லை என்றால் ரவீனா எப்போவோ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பார். மணியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அவர் இவ்வளவு நாள் அந்த வீட்டுக்குள் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ரவீனாவை ஆரம்பத்திலிருந்து கவனிப்பவர்களுக்கு அவருடைய குணம் நன்றாக தெரியும். ஒருவர் சொல்லுவதை மற்றவரிடம் போய் சொல்வதை தான் தொடர்ந்து அவர் செய்து வருகிறார். அர்ச்சனா உடன் மாயா குரூப்புக்கு நடந்த சண்டையின் போது கூட ரவீனா இந்த வேலையை தான் பார்த்தார். ரவீனாவின் இந்த குணம் தெரிந்ததால் தான் என்னவோ மணி அவரை தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் எந்த பிரச்சனையிலும் ரவீனா பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் மணி உஷாராக இருக்கிறார். அதனால் தான் ரவீனாவை யாரிடமும் பேச விடாமல் பழக விடாமல் பார்த்துக் கொள்கிறார். அவர் மட்டும் இல்லை என்றால் ரவீனாவின் சாயம் வெளுத்துப் போய் எப்பவோ மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்திருப்பார்.

Also Read:என்னது பார்ட் 2 ஆ.! விசித்ரா போட்ட புது சபதம், கூட்டு சேர்ந்த அர்ச்சனா

 

 

 

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்